Sunday, September 4, 2022
படைப்பாற்றல், தைரியம் மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டாடுங்கள்!
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் ஆற்றலையும் திறனையும் கற்பனை செய்து பாருங்கள், படைப்பாற்றல் ஊக்குவிக்கும் மற்றும் அழைக்கும் அனைத்தையும் இணைத்து, ஒத்துழைத்து, உருவாக்கி கொண்டாடுங்கள். அவர்களின் திறமைகள், பரிசுகள் மற்றும் ஆற்றலைப் பயன்படுத்தி, உலகை ஒரு சிறந்த இடத்திற்கு நகர்த்துவதற்காக, படைப்பாற்றல் சாம்பியன்களின் வளர்ந்து வரும் உலகளாவிய சமூகத்தில் நீங்கள் சேருவீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போதே பதிவு செய்து, செப்டம்பர் 15 அல்லது அதைச் சுற்றி டாட் டேயைக் கொண்டாடுங்கள் - உங்கள் செய்திகள், புகைப்படங்கள், கலை மற்றும் வீடியோக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்!
peter_reynolds_signature_new.png
தொடங்குங்கள்
சர்வதேச புள்ளி தினம், படைப்பாற்றல், தைரியம் மற்றும் ஒத்துழைப்பின் உலகளாவிய கொண்டாட்டம், ஆசிரியர் டெர்ரி ஷே தனது வகுப்பறையை பீட்டர் எச். ரெனால்ட்ஸ் புத்தகமான தி டாட் செப்டம்பர் 15, 2009 அன்று அறிமுகப்படுத்தியபோது தொடங்கியது.
தி டாட் என்பது அக்கறையுள்ள ஒரு ஆசிரியரின் கதையாகும், அவர் சந்தேகத்திற்குரிய மாணவனை "தனது முத்திரையை" பதிக்கும் அளவுக்கு தைரியமாக இருப்பதன் மூலம் தனது சொந்த திறன்களை நம்பத் துணிகிறார். ஒரு துண்டு காகிதத்தில் ஒரு சிறிய புள்ளியுடன் தொடங்குவது தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தில் ஒரு திருப்புமுனையாக மாறும், சுய கண்டுபிடிப்பு மற்றும் பகிர்வுக்கான பயணத்தைத் தூண்டுகிறது, இது உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஊக்குவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச புள்ளி தினத்தில் - உங்களைப் போன்றவர்களின் உதவியுடன் - உத்வேகம் தொடர்கிறது. ஒரு புத்தகத்தின் பக்கங்களில் ஒரு கதையாகத் தொடங்கியது, உலகெங்கிலும் கற்பித்தல் மற்றும் கற்றலை மாற்றியமைக்கிறது, எல்லா வயதினரும் தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் படைப்பாற்றலின் ஆற்றலையும் திறனையும் மீண்டும் கண்டுபிடிப்பார்கள்.
Thanks : https://www.internationaldotday.org/
Monday, August 8, 2022
நிக்கலாய் போக்டனவ் பெல்ஸ்கி
Nikolay Bogdanov-Belsky .
நிக்கலாய் போக்டனவ் பெல்ஸ்கி,
இவர் ஒரு ரஷ்ய ஒவியர் ( 1868 - 1945).
இவர் Rachinskiy என்னும் கணித ஆசிரியர் வகுப்புக்கு 1895 ஆம் ஆண்டு செல்கிறார். சென்று பார்த்த காட்சியை Mental Arithmetic.
In the Public School என்ற தலைப்பில் ஒவியமாக வரைந்துள்ளார்.
அதாவது 123 வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவில் எடுக்கப்பட்ட போட்டோ இது என்று எடுத்துக் கொள்ளும் அளவுக்கு தத்ரூபமாக பெல்ஸ்கி வரைந்துள்ளார்.
இதில் இருக்கும் ஒவ்வொரு மாணவரின் முகத்தில் தெரியும் ஆர்வத்தைப் பாருங்கள்.
நம் தாத்தாவின் அப்பா வயதுள்ள கேரக்டர்கள் தான் இந்த ஒவியத்தில் இருக்கிறார்கள் 123 வருடங்கள் முன்பு வாழ்ந்த டீன் ஏஜ் சிறுவர்களின் கணித ஆர்வத்தை பாருங்கள். அவர்கள் முகபாவனைகளை Zoom செய்து பாருங்கள்.
அடுத்து கரும்பலகையில் உள்ள கணக்கைப் பாருங்கள்.
(10² + 11² + 12 ² +13² + 14² )/ 365 என்றிருக்கிறது .
இதன் விடை
(100 + 121 + 144 + 169 + 196 ) / 365
730 / 365 = 2
இதை இப்படி எளிய கணக்காக கொள்ள முடியாது. அதற்கு Rachinskiy Sequence பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
3²+ 4² = 5² = 25
இங்கே 3,4,5 மூன்றும் அடுத்தடுத்து வரும் எண்கள்.
அவற்றின் வர்க்கத்துக்கு (Square) உள்ள தொடர்பைதான் இது குறிக்கிறது.
இது போல 10² + 11² + 12 ² = 13² + 14² ஆகும்.
10 ,11 ,12,13,14,15 வருகிறது. அதில் 10 ,11 , 12 எண்களின் வர்க்கத்தின் (Square) கூட்டுத்தொகை அதற்கடுத்து வரும் 12,13 எண்களின் வர்க்கத்தின் கூட்டுதொகைக்கு சமமாக இருக்கிறது.
10² + 11² + 12 ² = 13² + 14² = 365
இதைத்தான் 10² + 11² + 12 ² +13² + 14² / 365 என்று கொடுத்தார் Rachinskiy. அப்படி பார்க்கும் போது
365 + 365 / 365 = 2 என்று வரும்.
வேறு Rachinskiy வரிசை எண்கள் வருமாறு.
21² + 22² + 23² + 24² = 25² + 26² + 27² = 2030
36² + 37² + 38² + 39² + 40² = 41² + 42² + 43² + 44² = 7230
இந்த கணக்கை விடுங்கள்.
ஒரு ஒவியர் ஒரு கணித ஆசிரியர் வகுப்புக்கு சென்று அதில் உள்ள மாணவர்களின் ஆர்வத்தை ஒவியமாக வரைகிறார்.
அது எவ்வளவு பெரிய விஷயம். ரஷ்ய சமூகத்திற்கு அறிவியல் கணிதம் மேல் இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறதல்லவா.
Thursday, May 26, 2022
NIPUN BHARAT MISSION
உங்களிடம் எத்தனை பென்சில்கள் உள்ளன? எண்ணுவதைக் கற்றுக்கொள்வோம்: QR ஐ ஸ்கேன் செய்யவும் அல்லது இணைப்பைக் கிளிக் செய்யவும் https://bit.ly/Maths_Preschool3
https://diksha.gov.in/fln.html இல் மேலும் ஆராயவும்
#NCERT
#நிபுன்பாரத்
தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2022-24 Tamil Nadu Chief Minister's Fellowship Programme(TNCMFP)2022-24
தமிழ்நாடு அரசு
சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
அறிவிக்கை
தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்கு (2022-24) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. தமிழ்நாடு அரசு தனது அனைத்துத் துறைகளிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கிட பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டு கால தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இளம் வல்லுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது. மதிப்பீடு செய்வது, இடையூறுகளை கண்டறிவது மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதற்கு உதவுவது ஆகியவை அவர்களது முக்கிய பணிகளாகும். இவை சேவை வழங்கலில் ஏதேனும் இடைவெளிகள் இருப்பின் அவற்றினை நிவர்த்தி செய்திடவும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு நிகரான அரசின் சேவைகளை வழங்கிடவும் வழிவகை செய்யும். தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை ஒருங்கிணைப்பு துறையாக செயல்படும். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் கல்வி பங்காளராக செயல்படும்.
இணையவழி விண்ணப்பங்களை https://www.tn.gov.in/tncmfp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10.06.2022 ஆகும். இதற்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. இணையவழி வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முக்கிய தேதிகள் (Important Dates) தேதிகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. இதற்கான தேதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அதை https://www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 10.06.2022 அன்று மாலை 6.00 மணி வரை
இணையதள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பம் செய்திட இணையதளம்
திறக்கப்படும் நாள்
25.05.2022
Friday, April 29, 2022
காணொளிக்காட்சி கூட்டம்- பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு
சேலம் மாவட்டத்தில் 50% தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 30.04.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
*முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் மேற்காண் பொருள் சார்பான காணொளிக்காட்சி கூட்டம் இன்று (27.04.2022) பிற்பகல் 03.30 மணிக்கு* நடைபெற்றது
*அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்(பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறவுள்ள தொடக்கப் பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள்* ஆகியோர் *சார்ந்த வட்டார வள மையத்திலிருந்து(BRC) மேற்கண்ட காணொளி காட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்
Subscribe to:
Comments (Atom)
Featured Post
Popular Posts
-
i) படித்த, வேலையில் உள்ளவர்கள் எத்தனை பேர் ? Ans: 9 ii) படித்த, பின்தங்கியவர்கள் எத்தனை பேர் ? Ans: 14 iii) பி...
-
1. காபி அருந்தாத தேநீர் மற்றும் பழச்சாறு அருந்துபவர்கள் எத்தனை பேர்? Ans:17 2. பழச்சாறு அருந்தாத, தேநீர் மற்றும் காபி அருந்துபவர்கள் ...
-
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு-வடமேற்கு திசையில் நக...
Total Pageviews
MY ADS
MY ADS




