Latest posts
Your Blogger posts appear here in the main content area.
Friday, April 1, 2022
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மார்ச் – 29 - 2007 – கணிதத்தில் நோபல் பரிசு
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*மார்ச் – 29 - 2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்ட தினம்*
*ஏபெல் பரிசு (Abel Prize) என்பது நார்வே மன்னரால் ஆண்டுதோறும் உலகளாவிய கணிப்பில் சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு விருதாகும்*. 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த *நீல்ஸ் ஹென்றிக் ஏபெல்* என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
நார்வே நாட்டின் அறிவியல் கழகம் இந்த விருதைப் பெறும் சிறந்த கணிதவியலரைத் தெரிவுசெய்கிறது. இவ்விருது ஏறத்தாழ *நோபல் பரிசின் பெறுமதியை ஒத்தது. ஏபல் பரிசின் தற்போதைய மதிப்பு $875,000 அமெரிக்க டாலர்கள்8*.
*சாத்தமங்கலம் ரங்க ஸ்ரீனிவாச வரதன்*
(பிறப்பு: சனவரி 2, 1940) கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க ஏபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். அமெரிக்காவின் உச்ச உயர்வுப் பதக்கமான தேசிய அறிவியல் பதக்கத்தை 2010 ஆம் ஆண்டு பராக்கு ஒபாமா இவருக்கு அளித்தார். 2013 ஆண்டுக்கான இன்ஃபோசிசு பரிசையும் வென்றார். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.
வரதன், இந்தியாவில் சென்னையில் பிறந்தவர். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்கன் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். 1959இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுகலை (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில், புகழ் பெற்ற புள்ளியியலர் சி. ஆர். ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து 1963இல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில் 1963 இலிருந்து 1966 வரையில் பணியாற்றினார். 1966இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். 1968இல் இணைப்பேராசிரியரானார். 1972இல் பேராசிரியராக பணி உயர்வுபெற்று, 1980இலிருந்து 1984 வரையும் மறுபடியும் 1992 இலிருந்து 1994 வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.
இவரது மனைவி வசுந்தரா வரதன் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூயார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.
*பேராசிரியர் வரதனுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளிலும் கௌரவங்களிலும் சில பின்வருமாறு*:
• வருகைப் பேராளர், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (1976-77)
• வருகையாளர் பதவி, மிட்டாகு-இலெஃப்ளர் கழகம் ( Mittag-Leffler Institute) (1972)
• வருகையாளர் பதவி, முன்னிலை ஆய்வுக்கான கழகம் (Institute for Advanced Study), பிரின்சிட்டன் (1991-92)
• ஆல்ஃபிரடு பி. சுலோன் பேராளர் (1970-72)
• கூகன்ஃகைம் பேராளர் (1984-85)
• அமெரிக்க கணிதக்கழகத்தின் பிர்க்காஃப் பரிசு (1994)
• மார்கரரெட்டு-எர்மன் சோக்கோல் விருது, நியூயார்க்குப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் துறை (1995)
• மேரி கியூரீ பல்கலைக்கழகம், பாரிஸ், இன் பெருமைப்பட்டம் (2003)
• கொல்கத்தா இந்தியன் புள்ளியியல் கழகத்தின் பெருமைப்பட்டம் (2004)
• அமெரிக்கத் தேசிய அறிவியல் பதக்கம், 2010
• இன்ஃபோசிசுப் பரிசு, 2013
Completion Of Rocket Science - Session
*"Be a Change"*
Greetings Everyone!!
*ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து"*
*Learning is not the product of teaching. It is the product of activity for learners*
Agatiam joins hand with Ursago Solutions and Institutional Partners to invite all budding young scientists to the Felicitation session of Rocket Science Level 1 for Students in *Offline mode on 2nd April 2022 @09:00 AM* At *Vivekanda Auditorium,College of Engineering,Anna University,Chennai*
*Inaugrated on 26 Janaury 2022 ,14 remarkable Rocket science session was taught by Padmabhusan Dr
A Sivathanu Pillai with 485 Students of 67 Govt schools from 29 Districts in Tamil nadu.
Eminent Scientist *PadmaShri & Padma Bhushan Dr.A.Sivathanu Pillai* -Former Chief Controller, R&D, DRDO will deliver Final session for Level 1.
*Thiru K. Nanthakumar IAS*, Commissioner- School Education and *Prof.R. Velraj,* VC- Anna University will be delivering their keynote address.
Kindly join us through our YouTube channel to appreciate and encourage the budding scientist😊💐
Join our YouTube channel by subscribe it
https://youtu.be/UwJ7FfLZyRg
Ungal Anbundan
Er.Gokul &
Dr Balamurugan
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏப்ரல் – 2 - சர்வதேச குழந்தைகள் புத்தக நாள் (International Children's Book Day)
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*
*ஏப்ரல் – 2 - சர்வதேச குழந்தைகள் புத்தக நாள்*
*International Children's Book Day*
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள் (International Children’s Book Day - ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது *ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" *(International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும்* முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் *இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.*
*• புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்*
*• குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்*
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளைக் கொண்டாடும் முன்முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பு, ஒவ்வோராண்டும் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியத்தின் வெவ்வேறு நாட்டுப் பிரிவிற்கு வழங்கப்படும். அந்நாடு அவ்வாண்டிற்கான கொண்டாட்டக்கருத்தை முடிவு செய்து, தன்நாட்டின் சிறந்த எழுத்தாளரை அழைத்து உலகக் குழந்தைகளுக்கு அவ்வாண்டிற்கான செய்தியை எழுதவும் நன்கறியப்பட்ட ஓவியரை அழைத்து அவ்வாண்டிற்கான சுவரொட்டியை வடிவமைக்கவும் செய்யும். அந்த செய்தியும் சுவரொட்டியும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு புத்தகங்கள், படித்தல் ஆகியவற்றின் மீதான ஆர்வம் வளர்த்தெடுக்கப்படும்.
பன்னாட்டு குழந்தைகள் புத்தக நாளைக் கொண்டாட இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியத்தின் வெவ்வேறு பிரிவுகள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
• மக்கள்திரள் ஊடகங்களின் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
• பள்ளிகள், பொதுநூலகங்கள் ஆகியவற்றில் நிகழ்ச்சிகளை நடத்தப்படுகின்றன.
• குழந்தைகளின் புத்தகங்களைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள நடத்தப்படுகின்றன.
• எழுத்தாளர்கள், ஓவியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல், இலக்கியப் படைப்புப் போட்டி, புத்தகங்களுக்கு விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
*தமிழில் குழந்தைகளுக்காக இதுவரை வெளியான புத்தகங்களில் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களைப் பார்ப்போம்.*
1. அந்தோணியின் ஆட்டுக்குட்டி - கமலவேலன்
2. ரயிலின் கதை-பெ.நா.அப்புஸ்வாமி
3. சிறுவர் கலைக்களஞ்சியம் – பெ.தூரன்
4. எங்கிருந்தோ வந்தான் – கோ.மா. கோதண்டம்
5. நல்ல நண்பர்கள் – அழ.வள்ளியப்பா
6. நெருப்புக்கோட்டை- வாண்டுமாமா
7. வாசித்தாலும் வாசித்தாலும் தீராது – பேரா.எஸ்.சிவதாஸ்
8. ஆயிஷா – இரா.நடராசன்
9. குட்டி இளவரசன் – அந்துவான் எக்சுபரி – வெ.ஸ்ரீராம்
10. சிறுவர் நாடோடிக்கதைகள் – கி.ராஜநாராயணன்
11. பனி மனிதன் – ஜெயமோகன்
12. உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன்
13. வாத்துராஜா – விஷ்ணுபுரம் சரவணன்
14. ஆமைகளின் அற்புத உலகம் – யெஸ்.பாலபாரதி
15. மாகடிகாரம் – விழியன்
16. ஜிமாவின் கைபேசி – கோ.மா.கோ.இளங்கோ
17. யானைச்சவாரி – பாவண்ணன்
18. அற்புத உலகில் ஆலிஸ் – லூயி கரோல் – எஸ்.ராமகிருஷ்ணன்
19. விரால் மீனின் சாகசப்பயணம் – உதயசங்கர்
20. புத்தகத்தேவதையின் கதை –பேரா.எஸ்.சிவதாஸ் – யூமாவாசுகி
21. ஆடும் மயில் மற்றும் மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா,
22. தரங்கம்பாடி தங்கப் புதையல், பெ. தூரன்,
23. சந்திரகிரிக் கோட்டை, ஆர்.வி.
24. கானகக் கன்னி, கல்வி கோபாலகிருஷ்ணன்
25. சிற்பியின் மகள், பூவண்ணன்.
26. தங்க மயில் தேவதை, முல்லை தங்கராசன்
27. மர்ம மாளிகையில் பலே பாலு, வாண்டுமாமா
28. கொடி காட்ட வந்தவன், ரேவதி
29. இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) ச. தமிழ்ச்செல்வன்
*மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்*
1. அப்பா சிறுவனாக இருந்தபோது, அலெக்சாந்தர் ரஸ்கின் (நா. முகமது செரீபு), புக்ஸ் ஃபார் சில்ரன்,
2. குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம் - ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு,
3. நீச்சல் பயிற்சி, ரஷ்யச் சிறார் எழுத்தாளர்கள் (தமிழில்: சு.ந. சொக்கலிங்கம்), என்.சி.பி.எச். வெளியீடு,
4. ஆலிஸின் அற்புத உலகம், லூயி கரோல் (எஸ். ராமகிருஷ்ணன்), வம்சி வெளியீடு,
5. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம், எஸ்.சிவதாஸ் (ப. ஜெயகிருஷ்ணன்), அறிவியல் வெளியீடு,
6. சாரி பெஸ்ட் ஃபிரெண்ட், ஆங்கிலச் சிறார் எழுத்தாளர்களின் கதைகள் (தமிழில் குமரேசன்), புக்ஸ் ஃபார் சில்ரன்,
7. கானகத்துக் கீதங்கள், ஜித் ராய் (கு.ராஜாராம்), நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு,
8. பெனி எனும் சிறுவன், கிகோ புளூஷி, (யூமா வாசுகி), புக்ஸ் ஃபார் சில்ரன்,
9. புத்தகப் பரிசுப் பெட்டி, 15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், தமிழில்: உதயசங்கர், புக்ஸ் ஃபார் சில்ரன்,
10. கனவினைப் பின்தொடர்ந்து, த.வெ.பத்மா (ஜெ. ஷாஜகான்), எதிர் வெளியீடு
Thursday, March 31, 2022
SHAALA SIDDHI SELF EVALUATION REPORT - CRC KANJANAICKENPATTI
CRC KANJANAICKENPATTI
SHAALA SIDDHI SELF EVALUATION REPORT
Monday, March 28, 2022
Online Training on "Digital Infrastructure for School Education - DIKSHA" organized by CIET-NCERT.
Join us for the Online Training on "Digital Infrastructure for School Education - DIKSHA" organized by CIET-NCERT. The training commences from March 21, 2022 and will go on till March 25, 2022, from 4:00 pm to 5:00 pm on NCERT Official YouTube channel (http://youtube.com/ncertofficial ) and PMeVIDYA DTH TV channels number # 6-12.
For further information on registration and certification, visit https://ciet.nic.in/dikshatraining.php
For any query, write to us @ training.helpdesk@ciet.nic.in or call IVRS PMeVIDYA Toll Free #88004 40559
Subscribe to:
Posts (Atom)
