Sunday, April 9, 2023

SALM கற்பித்தலில் மாணவர்களை கவரும் கற்பித்தல் பைகள் - ஆசிரியை அசத்தல் ஏற்பாடு

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவவர்களுக்கு, கற்றல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி, இடைநிற்றல் இல்லாமல் அவர் களை பள்ளிக்கு வரவைக்க, பல்வேறு புதுமைகளை ஆசிரி யர்கள் அறிமுகப்படுத்தி வரு கின்றனர். அந்த வகையில், மாணவர்களே கையாளும் சுய வருகை பதிவேடு, கற்றல் உபகரணங்கள் அடங்கிய வகுப் பறை கற்பித்தலில் சேலத்தை சேர்ந்த ஆசிரியை அசத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட பெரியவடகம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. செயல்பட்டு வருகிறது. சுற்றி யுள்ள கிராமங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவர்கள், 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னராஜனின் ஒப்புதலுடன், இடைநிலை ஆசிரியை நித்யா, மாணவர்களுக்காக பல்வேறு புதுமை நடவடிக்கைகளை அறி முகப்படுத்தி, வெற்றி கண்டுள் ளார். இதற்காக, ஆன்லைன் கல்வி ரேடியோவின் இளம் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று
அசத்தி வருகிறார். இதுகுறித்து இடைநிலை ஆசிரியை நித்யா கூறியதாவது:

எனது வகுப்பறையில் மாணவர்களின் வருகையை, தாங்களே பதிவு செய்யும் வகை யில், சுயவருகை பதிவேடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கையாளுவதற்கு எளிமையாக, அவரவரின் கீழ்மட்டக் கரும்பலகையில், ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு பைகள் ஒட்டப்பட்டுள் ளது. அதில் ஒவ்வொரு நாள் காலையிலும், மாணவர்கள் தாங்கள் பள்ளி வகுப்பறைக் குள் வந்தவுடன், அவர்களுடைய பதிவேட்டினை எடுத்து வருகையை பதிவு செய்வர். முந்தைய நாள் வருகை புரியாத மாணவர், முந்தைய நாளுக் கான பதிவேட்டில் ஆப்சென்ட் என பதிவிடுவர். கற்பித்தலின் போது, மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், கற்பித்தல் உபகரணங்களை முன்கூட்டியே தயார் செய்து. இந்த கற்பித்தல் பைகளில் வைப்பது என் வகுப்பறையின் மற்றொரு புதுமையான செயல் பாடு. ஒவ்வொரு பாடத்திற்கும் 5 விதமான பைகள் ஒட்டி, உபகர ணங்கள் பராமரிக்கப்படுகிறது. உபகரணங்கள் எப்பொழுதும்
அந்தப் பைகளில் இருப்பதால், எப்பொழுது வேண்டுமானாலும் நானும், மாணவர்களும் எடுத்து பயன்படுத்த ஏதுவாக உள் ளது. இதனால் கற்பித்தலின் போது நம்பிக்கை ஏற்படுகி றது. தமிழில் ஒரு நிமிட கதை, பாடல், விடுகதைகள், ஆங்கில ஆ வார்த்தைகள், கதைகள், பாடல் கள் போன்ற செயல்பாடுகளை மாணவர்களுக்கு கொடுப்பதன் மூலம், மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அத்துடன் மாணவர்கள் வாசிப்பதை பதிவு செய்து, ஆன்லைன் கல்வி ரேடியோ, வானொலிக் கல்வி போன்ற தளங்களில் பதிவிடு கிறோம். மாணவர்கள் தங்கள் குரலை ரேடியோவில் கேட்பத னால், மேலும் ஆர்வத்துடன் வாசிக்க முயல்கின்றனர். வார்த்தை அட்டைகளை
உருவாக்கி 5 முதல் 10 அட்டை
கலை, அந்தப் பைகளில் இருப்பதால், எப்பொழுது வேண்டுமானாலும் நானும், மாணவர்களும்.எடுத்து பயன்படுத்த ஏதுவாக உள்ளது. இதனால் கற்பித்தலின் போது நம்பிக்கை ஏற்படுகி றது. தமிழில் ஒரு நிமிட கதை, பாடல், விடுகதைகள், ஆங்கில வார்த்தைகள், கதைகள், பாடல் கள் போன்ற செயல்பாடுகளை மாணவர்களுக்கு கொடுப்பதன் மூலம், மாணவர்களின் வாசிப்பு திறன் அதிகரிப்பதை கண்கூ டாக பார்க்க முடிகிறது. அத்துடன் மாணவர்கள் வாசிப்பதை பதிவு செய்து, ஆன்லைன் கல்வி ரேடியோ, வானொலிக் கல்வி போன்ற தளங்களில் பதிவிடு கிறோம். மாணவர்கள் தங்கள் குரலை ரேடியோவில் கேட்பத னால், மேலும் ஆர்வத்துடன் வாசிக்க முயல்கின்றனர்.

இதன்மூலம் மெல்ல கற்கும் மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகள் வாசித் தல் திறன் மேலோங்கியதை உணர முடிந்தது. விளையாட்டு செயல்பாடுகளில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்ற விதம் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவ ருக்கொருவர் விட்டுக்கொடுத்து விளையாடியது. அவர்களின் ஒற்றுமையை அதிகரிக்கச் செய் தது. இவ்வாறு ஆசிரியை நித்யா தெரிவித்தார்.
நன்றி : 10.04.2023 தினகரன் (paper page no 4 )

No comments:

Post a Comment

Featured Post

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை

ஐ. ரோசினிதேவி - வெற்றிக் கதை வெற்றிக் கதை ஐ. ரோசினிதேவி ...

Popular Posts

Total Pageviews

MY ADS

MY ADS

Contact Form

Name

Email *

Message *