Pages

Friday, December 22, 2023

கணித மன்றம் தொடக்க விழா - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பாப்பிசெட்டிப்பட்டி


இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  பாப்பிசெட்டிபட்டியில் கணித மேதை சீனிவாச ராமானுசன் பிறந்தநாள் விழா தேசிய கணித தின விழா மற்றும் கணித மன்ற துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது . விழாவை  மதிப்பிற்குரிய காடையாம்பட்டி வட்டார கல்வி  அலுவலர்   திரு.சிரில் விக்டர் துவங்கி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.  ஆசிரியர் பயிற்றுநர்கள் திருமதி ஜெ ஜமுனா மற்றும் கி ஐய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.மேலும் தலைமை ஆசிரியர் திருமதி கஸ்தூரி அவர்கள் வரவேற்புரை அளித்தார், கணித பட்டதாரி ஆசிரியர் திரு.திருக்குமரன் அவர்கள் விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்களும் மாணவர்களுக்கு தங்கள் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர்.அனைத்து மாணவச் செல்வங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர்.